திருவனந்தபுரம் - கன்னியாகுமரி பிரிவில் இரட்டை ரயில் பாதை திட்டப்பணி நடைபெற உள்ளது. இதையொட்டி ரயில்கள் இயக்கத்தில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக தென்னக ரயில்வே மதுரைக்கோட்டம் சார்பில் வெளியிடபட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
கொல்லம் ஜங்ஷனில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் மெமு...
more... எக்ஸ்பிரஸ் ரயிலும், கன்னியாகுமரியில் இருந்து கொல்லத்துக்கு இயக்கப்படும் மெமு எக்ஸ்பிரஸ் ரயிலும் பிப்ரவரி 4, 5, 6, 7, 8, 9, 14 மற்றும் 15-ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
புனலூர்-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் பிப்ரவரி 14, 15, 16 மற்றும் 17-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி - புனலூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் 14, 15, 16 மற்றும் 17-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
திருவனந்தபுரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் பிப்ரவரி 14, 15 மற்றும் 17-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி இடையேயும், திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் இடையேயும் இயக்கப்படும் திருச்சி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் பிப்ரவரி 4, 5, 6, 7, 8, 9, 14, 15, 16, 17 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் - திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுகிறது.
நாகர்கோவிலில் இருந்து கோட்டயம் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் பிப்ரவரி 4, 5, 6, 7, 8, 9, 14, 15, 16, 17 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
மங்களூரு - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலும், நாகர்கோவில் - மங்களூரு இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலும் இன்று (ஜன.29), பிப்ரவரி 10, 11, 12, 13 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் - நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.
கன்னியாகுமரியில் இருந்து கே.எஸ்.ஆர்.பெங்களூரு இடையே இயக்கப்படும் ரயில் பிப்ரவரி 14 மற்றும் 17-ம் தேதிகளில் கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
புனேயில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் பிப்ரவரி 12, 15-ம் தேதிகளில் பாறசாலை - கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படுகிறது.
கே.எஸ்.ஆர்.பெங்களூரு - கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் பிப்ரவரி 13, 16-ம் தேதிகளில் திருவனந்தபுரம் - கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி - ஸ்ரீமாதா வைஷ்னோ தேவி காட்ரா வாராந்திர ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் பிப்ரவரி 17-ம் தேதி பகல் 2.15 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் 50 நிமிடம் தாமதமாக 3. 05 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
இவ்வாறு தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
please wait...Translate to EnglishThiruvananthapuram - Kanyakumari section has a double rail line construction work going on. Due to this, there are several changes happening in the train operations.
As per the recent update, the following have been announced in connection with the Madurai Junction - Kanyakumari route:
MEMU Express trains running from Kollam Junction to Kanyakumari and Kanyakumari to Kollam Junction will be fully cancelled on 4th, 5th, 6th, 7th, 8th, 9th, 14th, and 15th of February.
The Express train running from Punalur to Nagarcoil will be cancelled on 14th, 15th, 16th, and 17th of February.
The Express train running from Kanyakumari to Punalur will be cancelled on 14th, 15th, 16th, and 17th of February.
The Express train running from Thiruvananthapuram to Nagarcoil will be cancelled on 14th, 15th, and 17th of February.
From Thiruvananthapuram to Trichy and from Trichy to Thiruvananthapuram ...